கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி விழா: 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு

கோவை சிவானந்தா காலனியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலம் சென்றனர்.



கோவை: கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனி பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.



விழாவை முன்னிட்டு, ரத்தினபுரி பகுதியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள வீதிகள் வழியாக சென்றது. குழந்தைகள் அணிந்திருந்த கிருஷ்ணர், ராதை வேடங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.



ஊர்வலம் நிறைவடைந்த பின்னர், சிவானந்தா காலனி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேடையில் தோன்றிய சிறுவர் சிறுமியர் பக்தி பாடல்களுக்கு நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.



நிகழ்ச்சியில் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக மேஜிக் ஷோவும் நடத்தப்பட்டது. இந்த மாய வித்தைகள் குழந்தைகளை பிரமிக்க வைத்தன. விழாவில் பங்கேற்ற அனைத்து சிறுவர், சிறுமியர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...