கோவை பன்னீர்மடையில் கிருஷ்ண ஜெயந்தி விழா: உரியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போட்டிகள் கோலாகலம்

கோவை துடியலூர் அருகே பன்னீர்மடை கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு பூஜைகள், உரியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போட்டிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை துடியலூர் அருகே பன்னீர்மடை கிராமத்தில் உள்ள கிருஷ்ணசாமி திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு பூஜைகள், உரியடித்தல் மற்றும் வழுக்குமரம் ஏறுதல் போன்ற பாரம்பரிய போட்டிகள் நடைபெற்றன.

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவிலில் கணபதி ஹோமம், அபிஷேக பூஜை, செண்டை மேளம் நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டன.



கோவிலுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் குழந்தைகள் ராதா, கிருஷ்ணா வேடமிட்டு கோவிலுக்கு வந்து சிறப்பித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உரியடி போட்டியில், பானையில் பால் தீர்த்தம் ஊற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் என பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் உரியை அடிக்க முயற்சிக்கும் போது, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது, இது போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரித்தது.



அடுத்ததாக, 60 அடி உயரம் கொண்ட வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதற்காக மரத்தின் பட்டையை உரித்து, சோற்றுக்கற்றாழை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைத் தேய்த்து மரம் வழவழப்பாக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



பலர் ஏற முயன்று தோல்வியுற்ற நிலையில், சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, பிரகாஷ் என்ற இளைஞர் மரத்தின் உச்சிக்கு ஏறி, அங்கு வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை எடுத்து வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணர் கருடவாகனத்தில் பன்னீர்மடையின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார். நாள் முழுவதும் அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர், பரம்பரை தர்மகர்த்தா, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...