கிருஷ்ண ஜெயந்தி: பொள்ளாச்சி அருகே மலை உச்சியில் உள்ள நந்த கோபால்சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி அருகே அங்குலகுறிச்சி மலையில் உள்ள நந்த கோபால்சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு உறி அடித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள அங்குலகுறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையில், சுமார் 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள நந்த கோபால்சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



கரடு முரடான பாதைகளைக் கடந்து மலையேறி வரும் பக்தர்கள் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.



இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



குழந்தைகள் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடமிட்டு, உறி அடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நந்தகோபால்சாமி மற்றும் பாமா ருக்மணி தாயாரை வழிபட்டனர்.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...