கிருஷ்ண ஜெயந்தி: பொள்ளாச்சி அருகே மலை உச்சியில் உள்ள நந்த கோபால்சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி அருகே அங்குலகுறிச்சி மலையில் உள்ள நந்த கோபால்சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு உறி அடித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள அங்குலகுறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையில், சுமார் 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள நந்த கோபால்சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



கரடு முரடான பாதைகளைக் கடந்து மலையேறி வரும் பக்தர்கள் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.



இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



குழந்தைகள் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடமிட்டு, உறி அடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நந்தகோபால்சாமி மற்றும் பாமா ருக்மணி தாயாரை வழிபட்டனர்.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...