கிருஷ்ண ஜெயந்தி: பொள்ளாச்சி அருகே மலை உச்சியில் உள்ள நந்த கோபால்சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி அருகே அங்குலகுறிச்சி மலையில் உள்ள நந்த கோபால்சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு உறி அடித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள அங்குலகுறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையில், சுமார் 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள நந்த கோபால்சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



கரடு முரடான பாதைகளைக் கடந்து மலையேறி வரும் பக்தர்கள் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.



இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



குழந்தைகள் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடமிட்டு, உறி அடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நந்தகோபால்சாமி மற்றும் பாமா ருக்மணி தாயாரை வழிபட்டனர்.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...