கோவையில் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள்: 1000 பேருக்கு அன்னதானம், 100 பேருக்கு தென்னங்கன்றுகள்

கோவை அசோகபுரத்தில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 1000 பேருக்கு அன்னதானம், 100 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. கட்சி கொடியேற்றம், உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் நான்கு ரோடு பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பில் தேமுதிக கட்சி நிறுவனரும், திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சண்முகவடிவேல் தலைமையேற்று, விஜயகாந்தின் உருவப்படத்திற்கு கற்பூரம் ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், 35 அடி உயர கொடிக்கம்பத்தில் தேமுதிக கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் "கேப்டன் புகழ் ஓங்குக" என முழக்கமிட்டனர்.



விழாவின் ஒரு பகுதியாக, 100 பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட செயலாளர் சண்முக பாண்டியன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் சக்கையன் ஆகியோர் வழங்கினர். மேலும், சுமார் 1000 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதேபோல், என்.ஜி.ஜி.ஓ காலனி கேட், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்கையா மேற்கொண்டிருந்தார். இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் வடமதுரை முருகன், சஹூல் அமிது, தங்கதுரை, ஆறுமுகம், விமல்பாலாஜி, சுலைமான், அஜீத், ரமேஷ், பாக்கியராஜ், போனஸ் பாபு, திங்கலூர் பாபு, தனபால், துடியலூர் ரமேஷ், சுடலைமுத்து, கணேஷன், விஜயகுமார், பாலாஜி, சிவா, ஆட்டோ ஆறுமுகம், லட்சுமணன், துரை, சிவமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...