கோவையில் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள்: 1000 பேருக்கு அன்னதானம், 100 பேருக்கு தென்னங்கன்றுகள்

கோவை அசோகபுரத்தில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 1000 பேருக்கு அன்னதானம், 100 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. கட்சி கொடியேற்றம், உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் நான்கு ரோடு பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பில் தேமுதிக கட்சி நிறுவனரும், திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சண்முகவடிவேல் தலைமையேற்று, விஜயகாந்தின் உருவப்படத்திற்கு கற்பூரம் ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், 35 அடி உயர கொடிக்கம்பத்தில் தேமுதிக கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் "கேப்டன் புகழ் ஓங்குக" என முழக்கமிட்டனர்.



விழாவின் ஒரு பகுதியாக, 100 பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட செயலாளர் சண்முக பாண்டியன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் சக்கையன் ஆகியோர் வழங்கினர். மேலும், சுமார் 1000 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதேபோல், என்.ஜி.ஜி.ஓ காலனி கேட், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்கையா மேற்கொண்டிருந்தார். இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் வடமதுரை முருகன், சஹூல் அமிது, தங்கதுரை, ஆறுமுகம், விமல்பாலாஜி, சுலைமான், அஜீத், ரமேஷ், பாக்கியராஜ், போனஸ் பாபு, திங்கலூர் பாபு, தனபால், துடியலூர் ரமேஷ், சுடலைமுத்து, கணேஷன், விஜயகுமார், பாலாஜி, சிவா, ஆட்டோ ஆறுமுகம், லட்சுமணன், துரை, சிவமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...