கோவை குழந்தைக்கு ரூ.16 கோடி மருத்துவ செலவு: அரசு உதவி கோரி அமைச்சர்களை சந்தித்த பெற்றோர்

கோவை சிந்தாமணி புதூரைச் சேர்ந்த சுரேஷ் தம்பதியினரின் குழந்தைக்கு ரூ.16 கோடி மருத்துவ செலவு தேவைப்படுவதால், அரசின் உதவியை நாடி அமைச்சர்களை சந்தித்துள்ளனர். இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை சிந்தாமணி புதூரைச் சேர்ந்த சுரேஷ் தம்பதியினரின் குழந்தைக்கு மருத்துவ செலவுக்காக ரூ.16 கோடி தேவைப்படுவதால், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பொதுமக்களிடமிருந்து முடிந்தவரை உதவிகள் கிடைத்தாலும், அது போதுமானதாக இல்லை.

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் R.முத்தரசன் அவர்களை கடந்த 21.08.2024 அன்று நேரில் சந்தித்து பேசினர். இதையடுத்து, முத்தரசன் சுகாதார அமைச்சரை 24.08.2024 அன்று நேரில் சந்தித்து விவரங்களைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர், குழந்தையை அழைத்து வந்து முழுமையாகப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.



இதே போல், இன்று கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சரையும் குழந்தையின் பெற்றோர் நேரில் சந்தித்துள்ளனர். மாவட்டப் பொறுப்பு அமைச்சர், இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு முழுமையாக ஒத்துழைத்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர். அரசின் உதவியுடன் குழந்தைக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...