உடுமலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

உடுமலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 72-வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.



Coimbatore: உடுமலையில் தேமுதிக நிறுவனர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உடுமலை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் டி.ஆறுச்சாமி கேக் வெட்டி விழாவைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் கிரி, பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடுமலை நகரம், உடுமலை ஒன்றியம் மற்றும் குடிமங்கலம் பகுதிகளில் கட்சியின் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.



கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உடுமலை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மேலும், உடுமலையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா கருணாகரன் மதிய உணவு வழங்கினார். குடிமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர் பெருமாள், துணைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட ஒன்றியப் பொறுப்பாளர்களும் அன்னதானம் வழங்கினர்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை உடுமலை நகர செயலாளர் ராமச்சந்திரன், நகரப் பொருளாளர் தென்றல் யூசுப், உடுமலை ஒன்றியப் பொறுப்பாளர் சுரேஷ், குடிமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி ஷர்மிளா, எரிசனம்பட்டி மாரிமுத்து, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவில் நகர அவைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் ரவி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...