உடுமலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

உடுமலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 72-வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.



Coimbatore: உடுமலையில் தேமுதிக நிறுவனர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உடுமலை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் டி.ஆறுச்சாமி கேக் வெட்டி விழாவைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் கிரி, பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடுமலை நகரம், உடுமலை ஒன்றியம் மற்றும் குடிமங்கலம் பகுதிகளில் கட்சியின் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.



கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உடுமலை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மேலும், உடுமலையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா கருணாகரன் மதிய உணவு வழங்கினார். குடிமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர் பெருமாள், துணைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட ஒன்றியப் பொறுப்பாளர்களும் அன்னதானம் வழங்கினர்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை உடுமலை நகர செயலாளர் ராமச்சந்திரன், நகரப் பொருளாளர் தென்றல் யூசுப், உடுமலை ஒன்றியப் பொறுப்பாளர் சுரேஷ், குடிமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி ஷர்மிளா, எரிசனம்பட்டி மாரிமுத்து, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவில் நகர அவைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் ரவி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...