தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக் கல்லூரியில் வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புப் பட்டதாரிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம் ஆகஸ்ட் 24, 2024 அன்று நடைபெற்றது. மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஆகஸ்ட் 24, 2024 அன்று வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புப் பட்டதாரிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது. பட்டதாரிகள் தொழில்முறைப் பாதையில் செல்ல மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் உத்திகளை வழங்குவதை கருத்தில் கொண்டு இந்த பட்டறை நடத்தப்பட்டது.



நிகழ்வின் முதன்மை விருந்தினர் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர் முனைவர் எஸ். வெங்கடேசன், ஐ.எஃப்.எஸ்., கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (காம்பா), பெங்களூரு, உரையாற்றுகையில், "வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகள் மிகவும் பரவலாக உள்ளன. மேலும் இந்த வாய்ப்பைப் பெறுவதற்கான போட்டித் திறனை வளர்க்க இதுபோன்ற தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் மூலம் பெறலாம்" என்று கூறினார்.



வனக்கல்லூரியின் முதன்மையர் முனைவர் அ.பாலசுப்ரமணியன் மாணவர்களை "வேலை தேடுபவர்களாக இருக்காதீர்கள், வேலை வழங்குபவர்களாக இருங்கள்" என்று வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தை நிறுவி அதில் பல்வேறு பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.



இந்நிகழ்வில் பங்கேற்ற புகழ்பெற்ற நிபுணர்கள், தொழில் ஆலோசகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புத் துறைகளில் உள்ள பல்வேறு தொழில் வாய்ப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிய திறன்கள் குறித்து ஆழமான வழிகாட்டுதலை வழங்கினர். பயிலரங்கில் ஊடாடும் அமர்வுகள், குழு விவாதங்கள் மூலம் துறைகளில் தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகளை எதிர்கொள்ள தேவையான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வனவியல் பேராசிரியர் முனைவர் ஐ.சேகர் வரவேற்புரை ஆற்றினார். வனவியல் பேராசிரியர் முனைவர் எஸ்.உமேஷ் கண்ணா நிகழ்வை ஒருங்கிணைத்தார். வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அதன் பட்டதாரிகளின் தொழில்முறை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், அவர்கள் அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கும் உறுதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...