கோவையில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்க மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

கோவை பன்னீர்மடை அருகே உள்ள டார்சா ரெசார்ட்டில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 19வது ஆண்டு மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் ஆய்வக உபகரணங்கள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை பன்னீர்மடை அருகே உள்ள டார்சா ரெசார்ட்டில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநில அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் ஆய்வக உபகரணங்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆய்வக விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநில அளவிலான கருத்தரங்கம் இது 19வது ஆண்டாக நடைபெறுகிறது.



கோவையில் இது மூன்றாவது முறையாக நடத்தப்படுகிறது. ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.



முதல் நாள் கருத்தரங்கில், இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வகமான மைக்ரோ பயோலாஜிக்கல் லேப் மணி, பி.எஸ்.ஜி. மெடிக்கல் கல்லூரி முதல்வர் சுப்பாராவ் மற்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் சிறப்புற வளர வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



கண்காட்சியை கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



25க்கும் மேற்பட்ட ஆய்வக விநியோகஸ்த நிறுவனங்களின் ஸ்டால்களில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஆய்வக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் ஆய்வக விநியோகஸ்தர்கள் தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்தி, கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மாநில அளவிலான ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. மேலும், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கோவை ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் நரேந்திரகுமார், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் அறிவுநந்தன் ஆகியோர் இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...