கோவையில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்க மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

கோவை பன்னீர்மடை அருகே உள்ள டார்சா ரெசார்ட்டில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 19வது ஆண்டு மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் ஆய்வக உபகரணங்கள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை பன்னீர்மடை அருகே உள்ள டார்சா ரெசார்ட்டில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநில அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் ஆய்வக உபகரணங்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆய்வக விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநில அளவிலான கருத்தரங்கம் இது 19வது ஆண்டாக நடைபெறுகிறது.



கோவையில் இது மூன்றாவது முறையாக நடத்தப்படுகிறது. ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.



முதல் நாள் கருத்தரங்கில், இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வகமான மைக்ரோ பயோலாஜிக்கல் லேப் மணி, பி.எஸ்.ஜி. மெடிக்கல் கல்லூரி முதல்வர் சுப்பாராவ் மற்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் சிறப்புற வளர வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



கண்காட்சியை கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



25க்கும் மேற்பட்ட ஆய்வக விநியோகஸ்த நிறுவனங்களின் ஸ்டால்களில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஆய்வக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் ஆய்வக விநியோகஸ்தர்கள் தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்தி, கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மாநில அளவிலான ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. மேலும், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கோவை ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் நரேந்திரகுமார், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் அறிவுநந்தன் ஆகியோர் இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...