கால்நடை பராமரிப்புத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன - உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கால்நடை பராமரிப்புத் துறை திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். பொள்ளாச்சி அருகே சாலைப் பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்றார்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், அதிமுக ஆட்சியில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா ஆடுகள், கறவை பசுக்கள், நாட்டுக்கோழிகள் ஆகியவற்றை ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேருக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்வதற்கு இந்தத் திட்டங்கள் முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் இதுபோன்ற நல்ல திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழக அரசு கறவை பசு, வெள்ளாடுகள், நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...