தாராபுரம் அருகே அருள்மிகு அவிமுக்த சுவேத கணபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

தாராபுரம் அருகே சங்கரண்டாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு அவிமுக்த சுவேத கணபதி திருக்கோவில் மற்றும் பட்டக்காரர் பெரியண்ணா வேணாவுடையார் திருக்கோவிலின் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சங்கரண்டாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு அவிமுக்த சுவேத கணபதி திருக்கோவில் மற்றும் பட்டக்காரர் பெரியண்ணா வேணாவுடையார் திருக்கோவிலின் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த 75 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலின் சிற்பங்கள் காசியில் வடிவமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டவை. விழாவின் போது கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன சாத்துதல் நிகழ்ச்சியுடன் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.



யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, முதலில் அவிமுக்த சுவேத கணபதிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டக்காரர் பெரியண்ணா வேணாவுடையார் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் மோட்டார் மூலம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது. இறுதியாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தாராபுரம், சங்கரண்டாம்பாளையம், நொச்சிபாளையம், குள்ளகாளிபாளையம், ஆலம்பாளையம், ஊதியூர் குண்டடம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால், ஊர் பொதுமக்கள், லக்கமா நாயக்கன்பட்டி தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையிலான 11 அர்ச்சகர்கள், மற்றும் கோவில் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...