தாராபுரம் அருகே அருள்மிகு அவிமுக்த சுவேத கணபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

தாராபுரம் அருகே சங்கரண்டாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு அவிமுக்த சுவேத கணபதி திருக்கோவில் மற்றும் பட்டக்காரர் பெரியண்ணா வேணாவுடையார் திருக்கோவிலின் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சங்கரண்டாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு அவிமுக்த சுவேத கணபதி திருக்கோவில் மற்றும் பட்டக்காரர் பெரியண்ணா வேணாவுடையார் திருக்கோவிலின் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த 75 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலின் சிற்பங்கள் காசியில் வடிவமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டவை. விழாவின் போது கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன சாத்துதல் நிகழ்ச்சியுடன் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.



யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, முதலில் அவிமுக்த சுவேத கணபதிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டக்காரர் பெரியண்ணா வேணாவுடையார் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் மோட்டார் மூலம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது. இறுதியாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தாராபுரம், சங்கரண்டாம்பாளையம், நொச்சிபாளையம், குள்ளகாளிபாளையம், ஆலம்பாளையம், ஊதியூர் குண்டடம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால், ஊர் பொதுமக்கள், லக்கமா நாயக்கன்பட்டி தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையிலான 11 அர்ச்சகர்கள், மற்றும் கோவில் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...