பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் காவல் ரோந்து பணி குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவல்துறையினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில் கட்டிடங்களுக்கு பின்புறம் எங்கெல்லாம் அதிக விளக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது, எங்கெல்லாம் கூடுதலாக சிசிடிவி கேமரா தேவைப்படுகிறது என்று ஆய்வு செய்தனர். கூடுதலாக எந்த இடத்தில் எல்லாம் சிசிடிவி வைக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது.



மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் இரவு நேரத்தில் செல்லும் பகுதிகளில் எங்கே கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. பிண ஆய்வு நடைபெறும் இடத்தில் கூடுதலாக காவல்துறையினர் தேவைப்பட்டால் காவல் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கும்படி அறிவுரை வழங்கினார்.



அவசர சிகிச்சை பகுதியில் அதிகமாக காவல் துறையினர் தேவைப்படும் நேரத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து கூடுதலாக காவலர்களை அனுப்பி வைக்கும்படி அறிவுரை வழங்கினார். மருத்துவமனையில் செயல்பட்டு வரும் புற காவல் நிலையத்தில் அதிகமாக காவல் துறை ஊழியர்கள் தருவதாக உறுதி அளித்தார்.



இரவு நேர காவல் ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் இரண்டு அல்லது மூன்று முறை மருத்துவமனை வளாகத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மருத்துவமனையில் இருந்து புகார் வந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து உடனடியாக காவல்துறையினர் வந்து விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...