பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் காவல் ரோந்து பணி குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவல்துறையினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில் கட்டிடங்களுக்கு பின்புறம் எங்கெல்லாம் அதிக விளக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது, எங்கெல்லாம் கூடுதலாக சிசிடிவி கேமரா தேவைப்படுகிறது என்று ஆய்வு செய்தனர். கூடுதலாக எந்த இடத்தில் எல்லாம் சிசிடிவி வைக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது.



மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் இரவு நேரத்தில் செல்லும் பகுதிகளில் எங்கே கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. பிண ஆய்வு நடைபெறும் இடத்தில் கூடுதலாக காவல்துறையினர் தேவைப்பட்டால் காவல் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கும்படி அறிவுரை வழங்கினார்.



அவசர சிகிச்சை பகுதியில் அதிகமாக காவல் துறையினர் தேவைப்படும் நேரத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து கூடுதலாக காவலர்களை அனுப்பி வைக்கும்படி அறிவுரை வழங்கினார். மருத்துவமனையில் செயல்பட்டு வரும் புற காவல் நிலையத்தில் அதிகமாக காவல் துறை ஊழியர்கள் தருவதாக உறுதி அளித்தார்.



இரவு நேர காவல் ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் இரண்டு அல்லது மூன்று முறை மருத்துவமனை வளாகத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மருத்துவமனையில் இருந்து புகார் வந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து உடனடியாக காவல்துறையினர் வந்து விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...