பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் காவல் ரோந்து பணி குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவல்துறையினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில் கட்டிடங்களுக்கு பின்புறம் எங்கெல்லாம் அதிக விளக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது, எங்கெல்லாம் கூடுதலாக சிசிடிவி கேமரா தேவைப்படுகிறது என்று ஆய்வு செய்தனர். கூடுதலாக எந்த இடத்தில் எல்லாம் சிசிடிவி வைக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது.



மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் இரவு நேரத்தில் செல்லும் பகுதிகளில் எங்கே கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. பிண ஆய்வு நடைபெறும் இடத்தில் கூடுதலாக காவல்துறையினர் தேவைப்பட்டால் காவல் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கும்படி அறிவுரை வழங்கினார்.



அவசர சிகிச்சை பகுதியில் அதிகமாக காவல் துறையினர் தேவைப்படும் நேரத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து கூடுதலாக காவலர்களை அனுப்பி வைக்கும்படி அறிவுரை வழங்கினார். மருத்துவமனையில் செயல்பட்டு வரும் புற காவல் நிலையத்தில் அதிகமாக காவல் துறை ஊழியர்கள் தருவதாக உறுதி அளித்தார்.



இரவு நேர காவல் ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் இரண்டு அல்லது மூன்று முறை மருத்துவமனை வளாகத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மருத்துவமனையில் இருந்து புகார் வந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து உடனடியாக காவல்துறையினர் வந்து விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...