பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் காவல் ரோந்து பணி குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவல்துறையினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில் கட்டிடங்களுக்கு பின்புறம் எங்கெல்லாம் அதிக விளக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது, எங்கெல்லாம் கூடுதலாக சிசிடிவி கேமரா தேவைப்படுகிறது என்று ஆய்வு செய்தனர். கூடுதலாக எந்த இடத்தில் எல்லாம் சிசிடிவி வைக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது.



மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் இரவு நேரத்தில் செல்லும் பகுதிகளில் எங்கே கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. பிண ஆய்வு நடைபெறும் இடத்தில் கூடுதலாக காவல்துறையினர் தேவைப்பட்டால் காவல் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கும்படி அறிவுரை வழங்கினார்.



அவசர சிகிச்சை பகுதியில் அதிகமாக காவல் துறையினர் தேவைப்படும் நேரத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து கூடுதலாக காவலர்களை அனுப்பி வைக்கும்படி அறிவுரை வழங்கினார். மருத்துவமனையில் செயல்பட்டு வரும் புற காவல் நிலையத்தில் அதிகமாக காவல் துறை ஊழியர்கள் தருவதாக உறுதி அளித்தார்.



இரவு நேர காவல் ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் இரண்டு அல்லது மூன்று முறை மருத்துவமனை வளாகத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மருத்துவமனையில் இருந்து புகார் வந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து உடனடியாக காவல்துறையினர் வந்து விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...