தாராபுரம்: தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிவாரண உதவி

தாராபுரம் புது கோட்டை மேடு பகுதியில் தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினருக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே புது கோட்டை மேடு பகுதியில் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜெயா (வயது 62) என்பவரின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கடந்த நான்கு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வீட்டின் மண் சுவர் நனைந்து பலவீனமடைந்ததே இதற்குக் காரணம் என தெரிகிறது. சம்பவம் நடந்த நேரத்தில் ஜெயாவின் மகன் சுரேஷ் வீட்டின் வெளியே இருந்ததால், அவர் உயிர்தப்பினார். ஜெயா சமையலறையில் இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.



இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கினார். இந்நிகழ்வில் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், நகர்மன்றத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் நிர்வாகம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மழைக்காலத்தில் பாதுகாப்பற்ற கட்டிடங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...