தாராபுரம்: தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிவாரண உதவி

தாராபுரம் புது கோட்டை மேடு பகுதியில் தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினருக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே புது கோட்டை மேடு பகுதியில் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜெயா (வயது 62) என்பவரின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கடந்த நான்கு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வீட்டின் மண் சுவர் நனைந்து பலவீனமடைந்ததே இதற்குக் காரணம் என தெரிகிறது. சம்பவம் நடந்த நேரத்தில் ஜெயாவின் மகன் சுரேஷ் வீட்டின் வெளியே இருந்ததால், அவர் உயிர்தப்பினார். ஜெயா சமையலறையில் இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.



இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கினார். இந்நிகழ்வில் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், நகர்மன்றத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் நிர்வாகம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மழைக்காலத்தில் பாதுகாப்பற்ற கட்டிடங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...