அரசியல் களத்துக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

கோவை சூலூரில் நடைபெற்ற கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் நடிகை நமீதா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசினார். கைத்தறி நெசவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏழாவது ஆண்டாக இப்போட்டிகள் நடத்தப்படுவதாகவும், இந்த ஆண்டு 2,490 மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "புதிதாக அரசியல் களத்தில் போட்டியாளராக, சக அரசியல்வாதியாக களம் கண்டுள்ள நடிகர் விஜய்க்கு பா.ஜ.க சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார்.

கோவைக்கான திட்டங்கள் குறித்து பேசிய அவர், "தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கோவைக்கு செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் எவ்வளவு விரைவில் முடிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே கருத்து கூற முடியும்," என்று தெரிவித்தார்.

தி.மு.க-பா.ஜ.க இடையிலான ரகசிய கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "அரசாங்க நிகழ்வுகளை கூட்டணி பார்வையில் பார்ப்பது தவறானது. அரசாங்கங்களுக்குள் உள்ள உறவை அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது," என்று கூறினார்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...