கிணத்துக்கடவு: குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு - வார்டு கவுன்சிலர் எதிர்ப்பு

கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில், குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு வழங்க முயற்சி. வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி சொலவம்பாளையம் ஊராட்சியில் முறைகேடான முறையில் தண்ணீர் இணைப்பு வழங்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சொலவம்பாளையம் ஊராட்சியின் முதல் வார்டுக்கு உட்பட்ட பகுதியில், எந்த முன்னறிவிப்பும் இன்றி ஊராட்சி சார்பில் தண்ணீர் பைப் போடுவதற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள அன்பு நகரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வேண்டி பல முறை அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதேபோல், வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் அவர்களும் ஊராட்சி தலைவரிடம் பல முறை இது குறித்து வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அந்தப் பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்காமல், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஆதரவாக குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு கொடுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக கவுன்சிலர் சதீஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்கே முதலில் தண்ணீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...