அகில இந்திய பார் கவுன்சில் முயற்சியில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, கலைக்கல்லூரி சாலையில் உள்ள கோவை நீதிமன்றத்தின் கிழக்கு நுழைவாயிலில் கோவை மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து அகில இந்திய பார் கவுன்சில் முயற்சியால் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தண்டபாணி கூறுகையில், தமிழகம் எங்கும் வழக்கறிஞர்களாக தொழில் செய்து வருகின்ற வழக்கறிஞர்கள் தங்களுடைய நியமான கோரிக்கைகள் எடுத்து சொல்லி போராடிய நேரங்களில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, இன்று அகில இந்திய பார் கவுன்சில் முயற்சியால் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.



குறிப்பாக, 25 வழக்கறிஞர்கள் மீது வாழ்நாள் முழுதும் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இதையெல்லாம் கண்டிக்கின்ற வகையிலும், அவர்கள் உரிமைகள் பாதுகாக்கின்ற வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டு நடவடிக்கை அறிவிற்புக்கேற்ப கோவையில் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெறுகிறது. இதன் மூலம் இவர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...