பொள்ளாச்சி அருகே திடீர் சூறாவளி: சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதியில் திடீர் சூறாவளி காற்று வீசியது. மரங்கள் விழுந்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறாவளி காற்று வீசியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்நிலையில், இன்று காலை பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பலத்த சூறாவளி காற்று வீச தொடங்கியது.

இதன் காரணமாக, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



ஆழியார் பூங்கா அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் மீது மரம் விழுந்ததால், அந்த கார் முழுவதும் சேதமடைந்தது.



இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒரு மிகப்பெரிய ராட்சத மரம் விழுந்ததில் நான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சூறாவளி காற்று வீசி வருவதால், வழக்கமாக பரபரப்பாக காணப்படும் ஆழியார்-வால்பாறை சாலை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. சாலை முழுவதும் விழுந்த மரங்களும் மரக்கிளைகளும் சிதறிக் கிடக்கின்றன.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...