உலக புகைப்பட தினத்தையொட்டி பொள்ளாச்சியில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

185வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் தலைக்கவச விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடத்தினர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் முக்கிய சாலைகளில் பவனி வந்தன.



கோவை: 185வது உலகப் புகைப்பட தின விழா ஆகஸ்ட் 19 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, பொள்ளாச்சியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.



தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர் தொழிற்சங்கம் மற்றும் வட்டார போக்குவரத்து துறை இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.



பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, கோவை சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது.



நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பங்கேற்ற புகைப்பட கலைஞர்கள், தலைக்கவசம் அணிந்தவாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அண்மைக்காலமாக தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படுவதாக பேரணி ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...