மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் நியமனம் குறித்து வானதி சீனிவாசன் கருத்து

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்களை நியமிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கோவை தெற்கு தொகுதி திட்டப்பணிகள் குறித்து விவாதித்தார்.



கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்களை நேரடியாக நியமனம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதிக்கான பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதித்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் மத்திய அரசின் இணைச் செயலாளர்களை இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் நேரடியாக நியமிப்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

வானதி சீனிவாசன் கூறுகையில், "ஒன்றிய அரசின் முக்கிய துறைகளில் திறமையானவர்களை நேரடி நியமனம் செய்கிறார்கள். இது நிரந்தர வேலையாக இல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நேரடி நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை பாதிக்கப்படாது," என்றார்.

மேலும் அவர், "இந்த நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் என 95% பேர் ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்கள். பாஜக கட்சியின் தேசிய தலைவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்தவர்கள். அரசாங்கத்தையே மக்கள் ஆர்.எஸ்.எஸ் பின்னணி உள்ளவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே, ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்களை உள்ளே கொண்டு வருகிறார்கள் என்ற கேள்விக்கு இடமில்லை," என்று தெரிவித்தார்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...