கோவை மாநகராட்சி சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு விழா

கோவை மாநகராட்சியின் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் 1587 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.





வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீத்தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 810 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மாநகராட்சியில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 16 பணியாளர்கள், சிறப்பாக பணிபுரிந்த 107 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 360 மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 26 மாணவர்கள், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற 17 மாணவர்கள் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.



12-ம் வகுப்பில் பாட வாரியாக 100% தேர்ச்சி அளித்த 119 ஆசிரியர்கள், 10-ம் வகுப்பில் பாட வாரியாக 100% தேர்ச்சி அளித்த 117 ஆசிரியர்கள், கலைத்திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 10 நபர்கள், மற்றும் IIT திட்டத்தின்கீழ் தேர்ச்சி பெற்ற 5 மாணவர்கள் உட்பட மொத்தம் 1587 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் சுழற்கேடயங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மண்டலக்குழுத் தலைவர்கள், மாநகர நல அலுவலர், மாநகர கல்வி அலுவலர், நகரமைப்பு அலுவலர், மண்டல உதவி ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.









Newsletter

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...