கோவையில் 23 கடைகளில் 90 லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் 253 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரம் இல்லாத 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரம் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறையினர் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு காந்திபுரம், வ.உ.சி பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ் புரம், பீளமேடு, கணபதி, சாய்பாபா காலனி, வடவள்ளி, சுந்தராபுரம், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர் இடங்களில் நடத்தப்பட்டது.



மொத்தம் 253 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 213 சில்லறை விற்பனை கடைகள், 22 தயாரிக்கும் நிறுவனங்கள், 18 மொத்த விற்பனையாளர்கள் அடங்கும். இந்த ஆய்வின் போது, 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரங்கள் இல்லாமல் குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 90 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கருத்து தெரிவிக்கையில், காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும், பொதுமக்கள் குளிர்பானங்கள் வாங்கும் போது அவற்றின் காலாவதி தேதியை கவனமாக சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...