கோவையில் 23 கடைகளில் 90 லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் 253 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரம் இல்லாத 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரம் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறையினர் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு காந்திபுரம், வ.உ.சி பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ் புரம், பீளமேடு, கணபதி, சாய்பாபா காலனி, வடவள்ளி, சுந்தராபுரம், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர் இடங்களில் நடத்தப்பட்டது.



மொத்தம் 253 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 213 சில்லறை விற்பனை கடைகள், 22 தயாரிக்கும் நிறுவனங்கள், 18 மொத்த விற்பனையாளர்கள் அடங்கும். இந்த ஆய்வின் போது, 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரங்கள் இல்லாமல் குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 90 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கருத்து தெரிவிக்கையில், காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும், பொதுமக்கள் குளிர்பானங்கள் வாங்கும் போது அவற்றின் காலாவதி தேதியை கவனமாக சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...