பொள்ளாச்சியில் தண்ணீர் திருட்டை தடுக்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தில் தண்ணீர் திருட்டை தடுக்க கோரி பொள்ளாச்சியில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.



Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட கண்காணிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாசன கால்வாய்களில் தண்ணீர் திருட்டை தடுக்க வலியுறுத்தியே இந்த போராட்டம் நடைபெறுகிறது.

சமீபத்தில் பெய்த மழையால் பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள சோலையார், பரம்பிக்குளம், ஆழியார், திருமூர்த்தி ஆகிய அணைகள் நிரம்பின. இதையடுத்து, திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கால்வாய்களில் பாசன தண்ணீர் திருடப்படுவதாக உப்பாறு பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.



நேற்று மாலை முதல் விவசாயிகள் கண்காணிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், எந்த அதிகாரியும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.

உப்பாறு பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும், தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். செயற்பொறியாளர் மற்றும் திட்டக்குழு தலைவர்கள் தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

போராட்டம் காரணமாக கண்காணிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திருட்டை தடுத்து, முறையாக பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...