கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 50 கையடக்க கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களும், ஒரு கொசு மருந்து அடிக்கும் வாகனமும் மேயரால் வழங்கப்பட்டன. இது டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேம்படுத்தும்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (20.08.2024) ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் 50 கையடக்க கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களையும், ஒரு கொசு மருந்து அடிக்கும் வாகனத்தையும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு வழங்கினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் உள்ள 100 வார்டுகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய உபகரணங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 50 கையடக்க கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் மற்றும் 5 கொசு மருந்து அடிக்கும் வாகனங்களுடன் சேர்ந்து பயன்படுத்தப்படும்.



இந்த புதிய முயற்சியின் மூலம், ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கையடக்க கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் கிடைக்கும். கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் AMS பணியாளர்கள் வாரந்தோறும் குடியிருப்புகள், கட்டுமான இடங்கள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அங்காடி பகுதிகள் ஆகியவற்றில் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன், மாநகர நல அலுவலர் (பொ) மரு.கே.பூபதி, மண்டல அலுவலர்கள் குணசேகரன், ஆண்டியப்பன், பரமசிவம், இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...