கோவையில் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

கோவை கடைவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை கடைவீதி காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் ரங்கராஜ், நேற்று (ஆகஸ்ட் 18) வைசியாள் வீதி – ஒப்பணக்கார வீதி சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்குள்ள துணிக்கடைகள் முன் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்த ஒரு கும்பலை அவர் கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், போலீஸ்காரர் ரங்கராஜை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ரங்கராஜ் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், போலீஸ்காரரிடம் தகராறு செய்ததாக கரும்பு கடை சேரன் நகரைச் சேர்ந்த ஹக்கீம் (வயது 37), சர்புதீன் (வயது 35), சுண்டக்காமுத்தூர் ஹரிரவேந்தரா (வயது 21), உக்கடம் பிலால் எஸ்டேட் அன்சர் (வயது 28), செல்வபுரம் ஆதிபதி (வயது 24), கரும்புக்கடை சாரமேடு முகமது அஜ்மல் உசைன் (வயது 34) ஆகிய 6 பேரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...