கோவை தெற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெருவிளக்கு ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் தெற்கு மண்டலத்தில் தெருவிளக்குகளை ஆய்வு செய்தார். பழுதடைந்த விளக்குகளை சரி செய்யவும், முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் 19.08.2024 அன்று இரவு தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஆணையாளர் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 99 போத்தனூர் மெயின் ரோடு, பத்மாலயா லே-அவுட் மற்றும் வார்டு எண் 96 குறிச்சி பொள்ளாச்சி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சரி செய்யவும், தெருவிளக்குகளை முறையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், அஸ்லம் பாஷா, குணசேகரன், உதவி பொறியாளர்கள் சபரி ராஜ், சுந்தர்ராஜ், சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.



இந்த திடீர் ஆய்வின் மூலம், தெருவிளக்குகளின் நிலை குறித்து நேரடியாக அறிந்து கொண்ட ஆணையாளர், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக தெருவிளக்குகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...