கோவை தெற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெருவிளக்கு ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் தெற்கு மண்டலத்தில் தெருவிளக்குகளை ஆய்வு செய்தார். பழுதடைந்த விளக்குகளை சரி செய்யவும், முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் 19.08.2024 அன்று இரவு தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஆணையாளர் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 99 போத்தனூர் மெயின் ரோடு, பத்மாலயா லே-அவுட் மற்றும் வார்டு எண் 96 குறிச்சி பொள்ளாச்சி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சரி செய்யவும், தெருவிளக்குகளை முறையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், அஸ்லம் பாஷா, குணசேகரன், உதவி பொறியாளர்கள் சபரி ராஜ், சுந்தர்ராஜ், சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.



இந்த திடீர் ஆய்வின் மூலம், தெருவிளக்குகளின் நிலை குறித்து நேரடியாக அறிந்து கொண்ட ஆணையாளர், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக தெருவிளக்குகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...