கோவை தெற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெருவிளக்கு ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் தெற்கு மண்டலத்தில் தெருவிளக்குகளை ஆய்வு செய்தார். பழுதடைந்த விளக்குகளை சரி செய்யவும், முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் 19.08.2024 அன்று இரவு தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஆணையாளர் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 99 போத்தனூர் மெயின் ரோடு, பத்மாலயா லே-அவுட் மற்றும் வார்டு எண் 96 குறிச்சி பொள்ளாச்சி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சரி செய்யவும், தெருவிளக்குகளை முறையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், அஸ்லம் பாஷா, குணசேகரன், உதவி பொறியாளர்கள் சபரி ராஜ், சுந்தர்ராஜ், சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.



இந்த திடீர் ஆய்வின் மூலம், தெருவிளக்குகளின் நிலை குறித்து நேரடியாக அறிந்து கொண்ட ஆணையாளர், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக தெருவிளக்குகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...