தாராபுரத்தில் 700 மாணவர்களுக்கு ரூ.33.63 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன

தாராபுரத்தில் 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 700 மாணவர்களுக்கு ரூ.33.63 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 700 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.33.63 லட்சம் மதிப்பீட்டில் இலவச மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், குறிப்பாக மாணவர்களின் திறன்களை அறிந்து வழிகாட்டுவதற்காக 'நான் முதல்வன்' என்ற சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.



மேலும் அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஒன்று அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது, மற்றொன்று ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவது. இந்த இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன," என்றார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், புத்தகப் பை, சீருடை உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படுவதாகவும், மதிய உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். "அனைத்துக் குழந்தைகளும் சத்துக்குறைவின்றி கல்வி கற்க வேண்டும். கல்வி எதிர்கால முதலீடு," என்று அவர் வலியுறுத்தினார்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மிதிவண்டிகள், தாராபுரம் என்.சி.பி. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐந்து சாலை சந்திப்பு அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவிந்தாபுரம் மாணிக்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயக்குமார், திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...