தாராபுரத்தில் 700 மாணவர்களுக்கு ரூ.33.63 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன

தாராபுரத்தில் 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 700 மாணவர்களுக்கு ரூ.33.63 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 700 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.33.63 லட்சம் மதிப்பீட்டில் இலவச மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், குறிப்பாக மாணவர்களின் திறன்களை அறிந்து வழிகாட்டுவதற்காக 'நான் முதல்வன்' என்ற சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.



மேலும் அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஒன்று அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது, மற்றொன்று ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவது. இந்த இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன," என்றார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், புத்தகப் பை, சீருடை உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படுவதாகவும், மதிய உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். "அனைத்துக் குழந்தைகளும் சத்துக்குறைவின்றி கல்வி கற்க வேண்டும். கல்வி எதிர்கால முதலீடு," என்று அவர் வலியுறுத்தினார்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மிதிவண்டிகள், தாராபுரம் என்.சி.பி. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐந்து சாலை சந்திப்பு அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவிந்தாபுரம் மாணிக்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயக்குமார், திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...