தாராபுரத்தில் 700 மாணவர்களுக்கு ரூ.33.63 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன

தாராபுரத்தில் 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 700 மாணவர்களுக்கு ரூ.33.63 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 700 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.33.63 லட்சம் மதிப்பீட்டில் இலவச மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், குறிப்பாக மாணவர்களின் திறன்களை அறிந்து வழிகாட்டுவதற்காக 'நான் முதல்வன்' என்ற சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.



மேலும் அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஒன்று அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது, மற்றொன்று ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவது. இந்த இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன," என்றார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், புத்தகப் பை, சீருடை உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படுவதாகவும், மதிய உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். "அனைத்துக் குழந்தைகளும் சத்துக்குறைவின்றி கல்வி கற்க வேண்டும். கல்வி எதிர்கால முதலீடு," என்று அவர் வலியுறுத்தினார்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மிதிவண்டிகள், தாராபுரம் என்.சி.பி. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐந்து சாலை சந்திப்பு அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவிந்தாபுரம் மாணிக்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயக்குமார், திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...