தாராபுரத்தில் 700 மாணவர்களுக்கு ரூ.33.63 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன

தாராபுரத்தில் 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 700 மாணவர்களுக்கு ரூ.33.63 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 700 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.33.63 லட்சம் மதிப்பீட்டில் இலவச மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், குறிப்பாக மாணவர்களின் திறன்களை அறிந்து வழிகாட்டுவதற்காக 'நான் முதல்வன்' என்ற சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.



மேலும் அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஒன்று அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது, மற்றொன்று ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவது. இந்த இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன," என்றார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், புத்தகப் பை, சீருடை உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படுவதாகவும், மதிய உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். "அனைத்துக் குழந்தைகளும் சத்துக்குறைவின்றி கல்வி கற்க வேண்டும். கல்வி எதிர்கால முதலீடு," என்று அவர் வலியுறுத்தினார்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மிதிவண்டிகள், தாராபுரம் என்.சி.பி. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐந்து சாலை சந்திப்பு அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவிந்தாபுரம் மாணிக்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயக்குமார், திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...