ரெட் லீப் ஹெர்பல்ஸ் நிறுவனம் மீதான புகார் பொய்யானது - நிர்வாக இயக்குனர் தியாகராஜன் விளக்கம்

தாராபுரத்தில் ரெட் லீப் ஹெர்பல்ஸ் நிறுவனம் மீது கண்வலி விதை கொள்முதலில் மோசடி புகார். நிர்வாக இயக்குனர் தியாகராஜன் புகாரை மறுத்து, விவசாயிகளுக்கு உரிய பணம் வழங்கப்படுவதாக உறுதியளித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ரெட் லீப் ஹெர்பல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன், தமது நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்களை முற்றிலும் மறுத்துள்ளார்.



திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளிடமிருந்து செங்காந்தள் மலர் எனப்படும் கண்வலி விதைகளை கிலோவுக்கு ரூ.3200 வீதம் வாங்கி வருவதாகவும், அதற்கான பணத்தை சுழற்சி முறையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருவதாகவும் தியாகராஜன் தெரிவித்தார்.

கள்ளிமந்தத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் ராஜரத்தினம் என்ற இருவர், ரெட் லீப் நிறுவனம் தங்களிடமிருந்து கண்வலி விதைகளை வாங்கி முழு பணத்தையும் வழங்கவில்லை என புகார் அளித்துள்ளனர். இந்த புகார் முற்றிலும் பொய்யானது என தியாகராஜன் மறுத்துள்ளார்.

"சுரேஷ்குமார் மற்றும் ராஜரத்தினம் ஆகியோரிடமிருந்து எங்கள் நிறுவனம் கண்வலி விதைகளை கொள்முதல் செய்யவில்லை. அவர்களுக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் பண பரிவர்த்தனையும் இல்லை," என்று தியாகராஜன் விளக்கினார்.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள 1,786 கிலோ கண்வலி விதைகள் கொள்முதல் குறித்தும், பாதி பணம் மட்டுமே வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டையும் தியாகராஜன் மறுத்தார். மேலும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும், வங்கிக் கணக்குகளை முடக்குவதாகவும் உள்ள குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

"எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்க முயலும் சுரேஷ்குமார் மற்றும் ராஜரத்தினம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்," என்று தியாகராஜன் எச்சரித்தார்.

ரெட் லீப் நிறுவனத்திற்கு கண்வலி விதைகளை விற்பனை செய்த விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்றும், அனைவருக்கும் சுழற்சி முறையில் வங்கி மூலம் பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தியாகராஜன் உறுதியளித்தார்.

மூலனூரில் நடைபெற்ற ரெட் லீப் நிறுவன ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் சந்திப்பில், விவசாயி சிவகுமார் பேசுகையில், "கடந்த 30 வருடங்களாக கண்வலி விவசாயம் செய்து வருகிறேன். 15 வருடங்களாக ரெட் லீப் நிறுவனத்திற்கு விதைகளை விற்று பணம் பெற்று வருகிறேன். அவர்கள் எந்த விவசாயியையும் ஏமாற்றவில்லை," என்று தெரிவித்தார்.

"சுரேஷ் மற்றும் ராஜரத்தினம் போன்றோர் வேறு சில நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, தங்கள் சுயலாபத்திற்காக போலி ஆவணங்கள் தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். விவசாயிகள் யாரும் இதை நம்ப வேண்டாம்," என்று சிவகுமார் எச்சரித்தார்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...