கோவை பெரியநாயக்கன்பாளையம் காடுகளில் 300 CRPF அதிகாரிகள் 7 நாள் வனவாழ்க்கை பயிற்சி

கோவை பெரியநாயக்கன்பாளையம் பாலமலை காடுகளில் 300 CRPF அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து 7 நாட்கள் வனவாழ்க்கை பயிற்சியில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகளின்றி காட்டில் உயிர்வாழ்தல், தீவிரவாதிகளை கண்காணித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



Coimbatore: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை வனப்பகுதியில் 300 CRPF (Central Reserve Police Force) பயிற்சி அதிகாரிகள் 7 நாட்கள் தங்கி வனவாழ்க்கை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியிலிருந்து கோவைக்கு வந்துள்ள இந்த CRPF வீரர்கள், 45 நாட்கள் கோவை ராக்கி பாளையத்தில் உள்ள இராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில் பல்வேறு பயிற்சிகளை பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது வனப்பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சியில் 300 அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.



பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அடர்ந்த வனப்பகுதியில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து இந்த அதிகாரிகள் தங்கியுள்ளனர். வனப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி, அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் வாழ்வது, காடுகளுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்களை கண்காணிப்பது, காடுகளில் உயிர் பிழைப்பது, மனித மற்றும் விலங்குகள் நடமாட்டம் பற்றி அறிவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.



இந்த 7 நாள் பயிற்சியில், அதிகாரிகளுக்கு அடிப்படை தேவைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் காடுகளில் எவ்வாறு தங்களை தக்க வைத்துக் கொள்வது என்பதை அனுபவபூர்வமாக கற்றுக்கொள்கின்றனர்.



CRPF தலைமை உதவி ஆணையர் மற்றும் கமாண்டர் ஏகே அனாஸ் தலைமையில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்த வனவாழ்க்கை பயிற்சி CRPF அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...