கோவை பெரியநாயக்கன்பாளையம் காடுகளில் 300 CRPF அதிகாரிகள் 7 நாள் வனவாழ்க்கை பயிற்சி

கோவை பெரியநாயக்கன்பாளையம் பாலமலை காடுகளில் 300 CRPF அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து 7 நாட்கள் வனவாழ்க்கை பயிற்சியில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகளின்றி காட்டில் உயிர்வாழ்தல், தீவிரவாதிகளை கண்காணித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



Coimbatore: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை வனப்பகுதியில் 300 CRPF (Central Reserve Police Force) பயிற்சி அதிகாரிகள் 7 நாட்கள் தங்கி வனவாழ்க்கை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியிலிருந்து கோவைக்கு வந்துள்ள இந்த CRPF வீரர்கள், 45 நாட்கள் கோவை ராக்கி பாளையத்தில் உள்ள இராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில் பல்வேறு பயிற்சிகளை பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது வனப்பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சியில் 300 அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.



பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அடர்ந்த வனப்பகுதியில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து இந்த அதிகாரிகள் தங்கியுள்ளனர். வனப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி, அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் வாழ்வது, காடுகளுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்களை கண்காணிப்பது, காடுகளில் உயிர் பிழைப்பது, மனித மற்றும் விலங்குகள் நடமாட்டம் பற்றி அறிவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.



இந்த 7 நாள் பயிற்சியில், அதிகாரிகளுக்கு அடிப்படை தேவைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் காடுகளில் எவ்வாறு தங்களை தக்க வைத்துக் கொள்வது என்பதை அனுபவபூர்வமாக கற்றுக்கொள்கின்றனர்.



CRPF தலைமை உதவி ஆணையர் மற்றும் கமாண்டர் ஏகே அனாஸ் தலைமையில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்த வனவாழ்க்கை பயிற்சி CRPF அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...