கோவை பெரியநாயக்கன்பாளையம் காடுகளில் 300 CRPF அதிகாரிகள் 7 நாள் வனவாழ்க்கை பயிற்சி

கோவை பெரியநாயக்கன்பாளையம் பாலமலை காடுகளில் 300 CRPF அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து 7 நாட்கள் வனவாழ்க்கை பயிற்சியில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகளின்றி காட்டில் உயிர்வாழ்தல், தீவிரவாதிகளை கண்காணித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



Coimbatore: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை வனப்பகுதியில் 300 CRPF (Central Reserve Police Force) பயிற்சி அதிகாரிகள் 7 நாட்கள் தங்கி வனவாழ்க்கை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியிலிருந்து கோவைக்கு வந்துள்ள இந்த CRPF வீரர்கள், 45 நாட்கள் கோவை ராக்கி பாளையத்தில் உள்ள இராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில் பல்வேறு பயிற்சிகளை பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது வனப்பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சியில் 300 அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.



பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அடர்ந்த வனப்பகுதியில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து இந்த அதிகாரிகள் தங்கியுள்ளனர். வனப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி, அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் வாழ்வது, காடுகளுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்களை கண்காணிப்பது, காடுகளில் உயிர் பிழைப்பது, மனித மற்றும் விலங்குகள் நடமாட்டம் பற்றி அறிவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.



இந்த 7 நாள் பயிற்சியில், அதிகாரிகளுக்கு அடிப்படை தேவைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் காடுகளில் எவ்வாறு தங்களை தக்க வைத்துக் கொள்வது என்பதை அனுபவபூர்வமாக கற்றுக்கொள்கின்றனர்.



CRPF தலைமை உதவி ஆணையர் மற்றும் கமாண்டர் ஏகே அனாஸ் தலைமையில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்த வனவாழ்க்கை பயிற்சி CRPF அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...