கோவையில் பிரம்மாண்ட துபாய் சிட்டி பொருட்காட்சி: புதிய அனுபவம் காத்திருக்கிறது

கோவை துடியலூரில் ஆகஸ்ட் 15 முதல் நடைபெறும் துபாய் சிட்டி பொருட்காட்சி, துபாய் நகரின் அனுபவத்தை வழங்குகிறது. பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், உணவு அரங்குகள், விற்பனை அரங்குகள் உள்ளன.



Coimbatore: கோவை துடியலூர் பகுதியில் உள்ள வி.ஜி. மருத்துவமனை அருகில், ரிலையன்ஸ் ஸ்மார்ட் எதிரில் பிரம்மாண்டமான "துபாய் சிட்டி" எனும் பொருட்காட்சி ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பொருட்காட்சியில், துபாய் நகரின் அடையாளமான புர்ஜ் அல் அரப் உள்ளிட்ட கட்டிடங்களின் மாதிரிகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அதிசயங்களை தத்ரூபமாக உருவாக்கி, மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது. கோவை வாசிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்தப் பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



பொருட்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான துரை, பங்குதாரர் இஸ்மாயில், ஜியாவுல் ஹக் ஆகியோர் கூறுகையில், "துபாய் நாட்டை நேரில் பார்க்காதவர்கள் இந்தப் பொருட்காட்சிக்கு வந்தால், துபாய் நகரில் உள்ளதை நேரில் காண்பது போன்ற அனுபவத்தை பெறுவார்கள்" என்றனர்.

இந்தப் பொருட்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மாண்ட ராட்டினம், ஸ்னோ வேர்ல்ட், பேய் வீடு அரங்குகள் ஆகியவை சிறப்பு கவர்ச்சிகளாக உள்ளன. மேலும், உணவு அரங்குகள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

டி.டி. எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நடத்தப்படும் இந்த துபாய் சிட்டி பொருட்காட்சி, கோவை மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் கண்காட்சி அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...