உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். 94,201 ஏக்கர் பயன்பெறும். 120 நாட்களுக்கு 8000 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படும்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று தண்ணீரை திறந்து வைத்தார்.

உடுமலை திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் பாசனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், Dharapuram மற்றும் காங்கேயம் ஆகிய வட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் மொத்தம் 94,201 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைகின்றன.

திறக்கப்படும் தண்ணீர் இன்று முதல் டிசம்பர் 16 ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு 4 சுற்றுகளில் உரிய இடைவெளி விட்டு 8000 மில்லியன் கன அடி திறக்கப்படுகிறது. தற்சமயம் திருமூர்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடியில் 57.21 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 889 கன அடியாக உள்ளது. தற்போது பிரதான கால்வாயில் 250 கன அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, தலைமை பொறியாளர் முருகேசன், திருமூர்த்தி கோட்டம் செயற்பொறியாளர் மகேந்திரன், திருமூர்த்தி அணை உதவி செயற்பொறியாளர் ஆதிசிவன், உடுமலை கால்வாய் கோட்டம் உதவி செயற்பொறியாளர் பாபு என்கிற சபரீஷ்வரன், திருமூர்த்தி அணை உதவி பொறியாளர் மாரிமுத்து ஆகியோருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...