உடுமலையில் திமுக அலுவலக திறப்பு விழா: சாலை மத்தியில் பந்தல் அமைத்ததால் அவசர ஊர்திகள் சிக்கல்

உடுமலையில் திமுக எம்பி அலுவலக திறப்பு விழாவிற்காக சாலையின் நடுவே பந்தல் அமைக்கப்பட்டதால், அவசர ஊர்திகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இச்செயல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி. வீதியில் அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், இன்று வ.உ.சி. வீதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக எம்பி ஈஸ்வரசாமியின் அலுவலகத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, திமுகவினர் வ.உ.சி. வீதியின் நடுவே பந்தல் அமைத்தனர். இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் அவசர ஊர்திகள் மற்றும் பிற வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின.



அவசர ஊர்திகள் மற்றும் வாகன ஓட்டிகள் சுமார் 500 மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்செயல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாலையின் நடுவே பந்தல் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பலரும், அரசியல் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தும் போது பொது இடங்களையும், சாலைகளையும் ஆக்கிரமிப்பது தவறு என்றும், இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...