உடுமலையில் திமுக அலுவலக திறப்பு விழா: சாலை மத்தியில் பந்தல் அமைத்ததால் அவசர ஊர்திகள் சிக்கல்

உடுமலையில் திமுக எம்பி அலுவலக திறப்பு விழாவிற்காக சாலையின் நடுவே பந்தல் அமைக்கப்பட்டதால், அவசர ஊர்திகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இச்செயல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி. வீதியில் அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், இன்று வ.உ.சி. வீதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக எம்பி ஈஸ்வரசாமியின் அலுவலகத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, திமுகவினர் வ.உ.சி. வீதியின் நடுவே பந்தல் அமைத்தனர். இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் அவசர ஊர்திகள் மற்றும் பிற வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின.



அவசர ஊர்திகள் மற்றும் வாகன ஓட்டிகள் சுமார் 500 மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்செயல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாலையின் நடுவே பந்தல் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பலரும், அரசியல் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தும் போது பொது இடங்களையும், சாலைகளையும் ஆக்கிரமிப்பது தவறு என்றும், இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...