அர்ஜூன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு: போலீஸார் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் நடந்த கூட்டத்தில் அரசுக்கு எதிராக பேசியதாகக் கூறப்படும் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட்8-ஆம் தேதி, கோவை கெம்பட்டி காலனி பாரதியார் திடலில் இந்து மக்கள் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓம்கார் பாலாஜி உரையாற்றினார். அப்போது அவர் கலகம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு அச்சம் மற்றும் பீதியை ஏற்படுத்தும் விதமாகவும், அரசுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்டும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, பெரியக்கடை வீதி சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் அளித்த புகாரின் அடிப்படையில், ஓம்கார் பாலாஜி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம், உள்ளூர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவரங்கள் வெளியாகவுள்ளன.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...