சுதந்திர தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத 82 நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 அன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் இரட்டை ஊதியம் வழங்காத 82 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக 105 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.


ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் இரட்டை ஊதியம் வழங்காத 82 கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தொழிலாளர் துறை அமலாக்க உதவி ஆணையர் வி.எம். திருஞானசம்பந்தம் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 105 நிறுவனங்களில் வியாழக்கிழமை அன்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 82 நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என்பதும், இரட்டை ஊதியம் வழங்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

மேலும், சுதந்திர தினத்தன்று பணிபுரிய தொழிலாளர் துறையிடம் அனுமதி பெறப்படவில்லை என்றும் தெரியவந்தது. எனவே, இந்த நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...