பொள்ளாச்சியில் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பலர் கலந்து கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் 91வது பிறந்த நாள் விழா பொள்ளாச்சி நகர திமுக சார்பில் தேர்நிலைத் திடல் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாநில தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க. முத்து, நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...