தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மாயம்..!

தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 7 மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனார். தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற அரசு மாதிரி பள்ளி மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தின் கீழ், குண்டடம் மாதிரி பள்ளியில் படிக்கும் 7 மாணவர்கள் சுதந்திர தின விழா விடுமுறையை கொண்டாட குளிக்கச் சென்றனர். இவர்களில் டேவிட், அசப் சாமுவேல், ஸ்டீவ் டேனியல், கலாப், டெவின் ரோஜர், நித்தீஸ் குமார் மற்றும் ஜெரோமியா ஆகியோர் அடங்குவர்.



எதிர்பாராத விதமாக, 16 வயதான ஜெரோமியா (ராஜகோபாலின் மகன்) என்ற மாணவன் மட்டும் நீரில் மூழ்கி காணாமல் போனார். மற்ற 6 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காணாமல் போன மாணவனைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தாராபுரம் அமராவதி ஆற்றுப் பாலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...