உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்கம் 78-வது சுதந்திர தின விழாவை நேதாஜி மைதானத்தில் கொண்டாடியது. விழாவில் தேசியக் கொடியேற்றம், அணிவகுப்பு மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா நேதாஜி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் ராணுவ நல சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரிமா சங்க அறக்கட்டளை சேர்மன் நீலகண்டன் தேசியக் கொடியேற்றினார்.



முன்னதாக, நாயப் சுபேதார் நடராஜ் தலைமையில் சுரேஷ் பிரகாஷ் உள்ளிட்டோர் அணிவகுப்பு நடத்தினர். நிகழ்ச்சியில் நேதாஜி நடைப்பயிற்சி நிர்வாகிகள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள்,



இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.





மேலும், ஓவியர் கனிமொழி என்ற மாணவி 78 சுதந்திர வீரர்களின் உருவப்படங்களை வரைந்து காட்சிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கத்தின் செயலாளர் சக்திவேல், பொருளாளர் சிவகுமார், நாயப்சுபேதார் நடராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...