கோவை புரானியில் 78வது சுதந்திர தின விழா: திமுக செயலாளர் நா.கார்த்திக் தேசியக் கொடியேற்றினார்

கோவை புரானி காலனியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திமுக செயலாளர் நா.கார்த்திக் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். பல்வேறு சமூக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை புரானி காலனியில் உள்ள "மஸ்ஜித் உல் குத்பி" புரானி-தாவூதி போரா ஜமாஅத் அசோசியேசன் சார்பில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு 2024 ஆகஸ்ட் 15 அன்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.), தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அவர் தனது சிறப்புரையில், அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் கோவை புரானி தவூதிபோரா அசோசியேசன் சங்க நிர்வாகிகள் தலைவர் ஷேக் மோயிஸ் காட்டாவாலா, பி.ஆர். செயலாளர் அலி அஸ்கர், பி.ஜி.ஐ.கேப்டன் ஹூசேபா ஆகியோர் தலைமை வகித்தனர்.

மேலும், 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால், மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், 27வது வார்டு துணைச் செயலாளர் அ. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



வட்டப் பிரதிநிதிகள் வேலுச்சாமி, ரமேஷ் குமார், மாநகர் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் லோகேஸ்வரி, கழக மூத்த முன்னோடிகள் கிருஷ்ணமூர்த்தி, கங்குவார் சீனு, எல் எம் டபிள்யூ சீனு, புருஷோத்தமன், அக்பரலி, நடேசன், தேசிங்கு ராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திமுக மகளிர் அணியைச் சேர்ந்த திலகவதி, அன்பரசி, விஜயகுமாரி, விஜயா உள்ளிட்டோரும், புரானி-தாவூதிபோரா அசோசியேசன் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் தாவூதிபோரா இஸ்லாமிய பொதுமக்கள் பலரும் இந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...