78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் 110 காலால்படை பட்டாலியன் நடத்திய திரங்கா பைக் பேரணி

கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள 110 காலால்படை பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் 75-வது ஆண்டு மற்றும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா பைக் பேரணி நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள 110 காலால்படை பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் 75-வது ஆண்டு மற்றும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா பைக் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை 2 இன் சி கமாண்டர் விக்ரம் சிங் துவங்கி வைத்தார்.

பேரணியில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனங்களில் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர். இவர்கள் 110 காலால் பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் வளாகத்தில் இருந்து புறப்பட்டு ரெட் பீல்ட்ஸ் சாலை, ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம் ஆகிய பகுதிகளில் பேரணியாக சென்றனர்.



பேரணியில் இருசக்கர வாகனங்களுக்கு பின்னால் ராணுவ வாகனம் ஒன்றும் சென்றது. அந்த வாகனத்தில் தேசியக் கொடிகள் ஏந்தப்பட்டிருந்தன. மேலும், ஒலிபெருக்கி மூலம் தேசப்பற்று பாடல்கள் ஒலிக்கப்பட்டன. இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.



இந்த திரங்கா பைக் பேரணி மூலம் மக்களிடையே தேசப்பற்றை வளர்ப்பதும், 78-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிப்பதும் நோக்கமாக இருந்தது. பேரணியில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...