கோவை ரேஸ்கோர்ஸில் அறிமுகமான புதிய ரோந்து பைக்: சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் தகவல்

கோவை ரேஸ்கோர்ஸில் புதிய ரோந்து பைக் அறிமுகம் செய்யப்பட்டது. சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ரேஸ்கோர்ஸ் பகுதியில் புதிய ரோந்து பைக்கை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், "'Smart Policing for Smart City' என்ற குறிக்கோளுடன் கோவை மாநகர காவல் துறை சரக்கத்திற்கு உட்பட்ட ஸ்மார்ட் சிட்டி பகுதிகளில் ரோந்து பணியை எளிதாக்குவதற்காக, குமரகுரு இன்ஸ்டிடியூஷன்ஸ் மாணவர்களின் உதவியுடன் இந்த ரோந்து பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது," என்றார்.

காவல் ஆணையர் மேலும் கூறுகையில், "தற்போது இந்த ரோந்து பைக் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பயன்பாடுகளைப் பொறுத்து கோவை மாநகரில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பகுதிகளான வாலாங்குளம், உக்கடம், ஆர்எஸ் புரம், குறிச்சி உள்ளிட்ட 6 பகுதிகளில் 6 ரோந்து பைக்குகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்," என்று தெரிவித்தார்.



இந்த ரோந்து பைக் Public Address System, Flashlight, GPS உள்ளிட்ட சேவைகளை உள்ளடக்கிய ஸ்மார்ட் வாகனமாக உள்ளது. 50 ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், குறிப்பிட்ட நேரம் இல்லாமல் இரவு பகல் என இரண்டு நேரங்களிலும் ரோந்து பணியில் பயன்படுத்தப்படும்.

சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய காவல் ஆணையர், "கோவை மாநகர எல்லையில் உள்ள சோதனை சாவடிகள், வாகனத் தணிக்கை செய்யும் இடங்களில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வ.உ.சி மைதானத்தில் நேற்றிலிருந்தே பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் சோதனை செய்யப்படுகிறார்கள். மொத்தம் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரை பொறுத்தவரை சுதந்திர தின கொண்டாட்டம் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடைபெறும்," என்று உறுதி அளித்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...