EMRI-GHS நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் EMRI-GHS நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்டவிரோத வேலை நேரம், அடிப்படை வசதிகள் இன்மை போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: EMRI-GHS நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். 50க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் EMRI-GHS நிர்வாகத்தின் பெண் அதிகாரி தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். சட்டவிரோத 12 மணி நேர வேலை, வேலை பார்க்கும் இடத்தில் அடிப்படை வசதியின்மை, வாய்மொழி உத்தரவாத பணியிட மாறுதல், பணி நீக்கம் உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காக, நிர்வாகத்தின் விசாரணை அதிகாரியாக உள்ள அம்மு, சட்டவிரோதமாக தொழிற்சங்க உறுப்பினர்களை தண்டிப்பதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



EMRI-GHS நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கையை கைவிடுதல், ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுத்தல், விடுமுறை நாட்களில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் 108 ஆம்புலன்ஸ்கள் முறையாக இயக்கப்படுதல், தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் அடிப்படை வசதிகளை அமைத்து தருதல், கோவை மாவட்ட நிர்வாக அதிகாரி விக்னேஷின் நேர்மையற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டு முதற்கட்டமாக தென்காசி மற்றும் மதுரை மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இரண்டாம் கட்டமாக இன்று கோவையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...