கோவையில் குறுகிய தெருக்களில் ரோந்து பணிக்கு 'டிரைக் பைக்' அறிமுகம்: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு

கோவையின் குறுகிய தெருக்களில் ரோந்து பணிக்காக 'டிரைக் பைக்' என்ற புதிய மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இந்த வாகனத்தை ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்.


கோவை: கோவையில் சிறிய தெருக்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள கோவை மாநகர காவல்துறையினர் புதுவகை வாகனத்தை அறிமுகம் செய்துள்ளனர். 'டிரைக் பைக்' எனப்படும் இந்த வாகனத்தை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்.



இருசக்கர வாகனம் போல் அல்லாமல், ஆட்டோவில் பாடி இல்லாமல் இருப்பது போன்ற தோற்றத்தில் இந்த 'டிரைக் பைக்' உள்ளது. மூன்று சக்கரங்கள் கொண்ட இந்த வாகனத்தை சிறிய தெருக்களில் எளிதாக ஓட்டிச் செல்ல முடியும். மின்சார வாகனமாக உள்ள இதனை பயன்படுத்தி போலீசார் இனி ரோந்து பணி மேற்கொள்வார்கள்.

கோவை மாநகரம் சென்னைக்கு அடுத்தபடியாக மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். 1990களில் நூற்பாலைகளும், தறி ஆலைகளும் அதிக அளவில் இயங்கி வந்த கோவை, ஒரு காலக்கட்டத்தில் தொழிலாளர்களின் நகரமாக விளங்கியது. இன்று கோவை மாநகரம் மிகப்பெரியதாக வளர்ந்துவிட்டதால், ஏராளமான தொழிற்சாலைகள் நகரத்தை விட்டு வெளியேறி புறநகர் பகுதிகளுக்குச் சென்றுவிட்டன. பல புதிய நிறுவனங்களும் புறநகர் பகுதிகளிலேயே செயல்படுகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் கோவை முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளும், தனி வீடுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. முன்பு தொழிற்சாலைகள் இருந்த இடங்கள் இப்போது வணிக வளாகங்களாக மாறியுள்ளன. பல சிறிய நிறுவனங்கள் இருந்த இடங்கள் முழுமையாக குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் பெற்றுள்ளன.

கோவை மாநகரம் உக்கடம் முதல் நீலாம்பூர் வரை அவினாசி சாலையில் விரிவடைந்துள்ளது. இதேபோல் திருச்சி சாலையில் சூலூர் வரையிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொண்டாமுத்தூர் வரையிலும் நகரம் பரவியுள்ளது. பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி வரையிலும், பாலக்காடு சாலையில் மதுக்கரை வரையிலும், மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை வரையிலும், சத்தி சாலையில் கோவில்பாளையம் வரையிலும் கோவை மாநகரம் விரிவடைந்துள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 7,000 தெருக்கள் உள்ளன. இவற்றில் பல தெருக்கள் மிகவும் குறுகலானவையாக உள்ளன. இத்தகைய குறுகிய தெருக்களில் போலீசார் ரோந்துப் பணியை மேற்கொள்ள 'டிரைக் பைக்' என்ற அதிநவீன வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...