கோவை மாவட்ட புதிய எஸ்பி Dr.கார்த்திகேயன் ஐபிஎஸ் பதவியேற்பு: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி

கோவை மாவட்டத்தின் 43-வது காவல் கண்காணிப்பாளராக Dr.கார்த்திகேயன் ஐபிஎஸ் பதவியேற்றார். சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் உறுதியளித்தார்.



கோவை: கோவை மாவட்டத்தின் 43-வது காவல் கண்காணிப்பாளராக Dr.கார்த்திகேயன் ஐபிஎஸ் இன்று பதவியேற்றுக்கொண்டார்.



பல் மருத்துவராகவும் உதவி பேராசிரியராகவும் பணியாற்றிய Dr.கார்த்திகேயன், இந்திய குடிமையியல் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய காவல் பணியில் இணைந்தார். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பின்னர், தற்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.



பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய Dr.கார்த்திகேயன், கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மோசடி, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்பு குறித்து பேசிய அவர், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதை புழக்கத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு குறித்து பேசிய Dr.கார்த்திகேயன், சாலை விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். பொதுமக்களின் மனுக்கள் மீது பாரபட்சமின்றி விசாரித்து விரைவான தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

கேரளாவுடனான எல்லைப் பாதுகாப்பு குறித்தும் அவர் பேசினார். சோதனை சாவடிகளில் போலீஸ் பற்றாக்குறை மற்றும் சிசிடிவி கேமராக்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார். மோதல் கொலைகள் நடைபெறாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பழைய வழக்குகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் Dr.கார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...