உடுமலை மாணவி இரண்டாவது முறையாக தேசிய துப்பாக்கி சூடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை

திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவி பிரீத்தி, தேசிய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் 296 மாணவர்கள் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவி பிரீத்தி, தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரீத்தி கடந்த ஆண்டு மார்ச் 2023-ல் துப்பாக்கி சுடும் பயிற்சியைத் தொடங்கினார். முதலில் மாநில அளவிலான தேசிய மாணவர் படைக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார். பின்னர் 5TN Girls Battalion NCC அலுவலகத்தின் மூலம் தொடர் பயிற்சி மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் மௌலங்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த மாதம் திருச்சி NIT கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் தேசிய அளவில் 296 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இச்சாதனைக்காக உடற்கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு தேசிய மாணவர் படை தலைவர் ஆகியோர் பிரீத்தியை சென்னைக்கு அழைத்து பாராட்டினர். இதைத் தொடர்ந்து, மாணவியை கௌரவிக்கும் விதமாக கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.



இவ்விழாவில் 5TN Girls Battalion Commanding Officer J.M ஜோஷி கலந்துகொண்டு மாணவி பிரீத்தியையும், தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் முனைவர் கற்பகவள்ளியையும் பாராட்டினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் முனைவர் மஞ்சுளா, கல்லூரி முதல்வர் முனைவர் பரமேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் வரலாற்று துறை இணை பேராசிரியரும் தேசிய மாணவர் படை அலுவலருமான கேப்டன் முனைவர் கற்பகவள்ளி மேற்கொண்டார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...