உலக உறுப்பு தான தினம்: 'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் 'Gift an Organ' கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

கோவையில் உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு "Gift an Organ" கையெழுத்து இயக்கத்தை துவங்கியது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இதனை துவக்கி வைத்தார்.


கோவை: கோவை 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி கொண்டாடப்படும் உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டு உறுப்பு தான தினமான இன்று (ஆகஸ்ட் 13) 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் துவங்கப்பட்டுள்ள "Gift an Organ" என்ற கையெழுத்து இயக்கத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கையொப்பமிட்டு துவக்கி வைத்தார்.

'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் மருத்துவ பிரிவைச் சேர்ந்த Dr. சுப்புராஜா கூறுகையில், "ஆண்டுதோறும் இந்தியாவில், ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் உடல் உறுப்பு இல்லாமல் உயிரிழந்து வருகிறார்கள். மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்ய முன்வரும் பட்சத்தில், மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளை வைத்து 15 நபர்கள் வரை பாதுகாக்க முடியும்" என்றார்.

'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் சேர்மன் விஷ்ணு பிரபாகர் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளாக இந்த உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறோம். இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணியை துவங்கி உள்ளோம். இதனைத் தொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் இந்த மாதம் முழுவதும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்" என்றார்.

Newsletter

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...