உலக உறுப்பு தான தினம்: 'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் 'Gift an Organ' கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

கோவையில் உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு "Gift an Organ" கையெழுத்து இயக்கத்தை துவங்கியது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இதனை துவக்கி வைத்தார்.


கோவை: கோவை 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி கொண்டாடப்படும் உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டு உறுப்பு தான தினமான இன்று (ஆகஸ்ட் 13) 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் துவங்கப்பட்டுள்ள "Gift an Organ" என்ற கையெழுத்து இயக்கத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கையொப்பமிட்டு துவக்கி வைத்தார்.

'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் மருத்துவ பிரிவைச் சேர்ந்த Dr. சுப்புராஜா கூறுகையில், "ஆண்டுதோறும் இந்தியாவில், ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் உடல் உறுப்பு இல்லாமல் உயிரிழந்து வருகிறார்கள். மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்ய முன்வரும் பட்சத்தில், மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளை வைத்து 15 நபர்கள் வரை பாதுகாக்க முடியும்" என்றார்.

'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் சேர்மன் விஷ்ணு பிரபாகர் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளாக இந்த உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறோம். இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணியை துவங்கி உள்ளோம். இதனைத் தொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் இந்த மாதம் முழுவதும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்" என்றார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...