கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் போஸ்டர்கள்: மீண்டும் மோதல் சூழல்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



Coimbatore: கோவை மாநகராட்சி பகுதியில் அரசியல் கட்சிகள் மாறி மாறி பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டியதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டு சிறைக்குச் செல்லும் அளவிற்கு நிலைமை உருவானது.

இதனைத் தடுக்கும் விதமாக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேம்பாலச் சுவர்களில் கோவை மாநகரைச் சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள், இயற்கை ஓவியங்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு வரையச் செய்தது. மேலும், விடுதலைப் போராட்ட தியாகிகளின் உருவப்படங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் அரசியல் கட்சியினர் இடையே சமரசமான சூழ்நிலை உருவானது.



ஆனால், தற்போது மாநகராட்சி அலுவலகம் முன்பு மீண்டும் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மோதல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...