கோவையில் நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டியில் அயோத்திய அணி சாம்பியன்

கோவையில் ஏஜேகே டர்ஃப் டென்5 சார்பில் நடைபெற்ற ஆடவர்களுக்கான திறந்த நிலைப்பிரிவு ஐவர் கால்பந்து போட்டியில் அயோத்திய புட்பால் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


கோவை: கோவை பாலக்காடு நெடுஞ்சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே டர்ஃப் டென்5 நவீன கால்பந்து விளையாட்டு மைதானத்தில் ஏஜேகே டர்ஃப் டென்5 சார்பில் ஆடவர்களுக்கான திறந்த நிலைப்பிரிவு ஐவர் கால்பந்து போட்டி 11.8.2024 அன்று நடைப்பெற்றது. நாடு முழுவதிலுமிருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.



நாக் அவுட் முறையில் பகல் இரவு போட்டிகளாக நடந்த இந்த நிகழ்வில், கால்பந்து வீரர்கள் சாதுர்யமாக பந்தை கடந்து இலக்கை நெருங்கினர். மிகவும் சுவாரஸ்யமாக நடந்த இப்போட்டியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

இந்தப்போட்டிகளில் முதல் இடத்தை அயோத்திய புட்பால் அணி 5 புள்ளிகளுடன் வென்றது. ஒரு புள்ளியுடன் ஃபிரண்ட்ஸ் புட்பால் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. மூன்றாவது இடத்தை 3 புள்ளிகளுடன் ஏஜேகே ஸ்ட்ரைக்கர்ஸ் புட்பால் அணி வென்றது. நேரு கலை அறிவியல் கல்லூரி அணி 2 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்றது.

முதலிடம் வென்ற அயோத்தியா புட்பால் அணிக்கு பரிசுக்கோப்பையும், ரூபாய் 10,000 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் வென்ற ஃபிரண்ட்ஸ் புட்பால் அணிக்கு ரூபாய் 7,000 பரிசுத்தொகையும், பரிசுக்கோப்பையும், மூன்றாம் இடம் வென்ற ஏஜேகே ஸ்ட்ரைக்கர்ஸ் புட்பால் அணிக்கு ரூபாய் 5,000 பரிசுத்தொகையும், பரிசுக்கோப்பையும், நான்காம் இடம் வென்ற நேரு கலை அறிவியல் கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டது.

ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளை ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் தினேஷ்குமார் அவர்கள் வழங்கி, வெற்றி பெற்ற அணிகளை பாராட்டி வாழ்த்தினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...